கவிதை #1 - காதல்
படித்த/ரசித்த சில சிறு கவிதைகள் : முன்னிருக்கையில் யாரோ? முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ.. தாங்க முடியவில்லை. - கல்யாண்ஜி ✤ ✤ ✤ பூங்கொடியே உனக்குப் பூ வாங்கி வருகிறேன். முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன் கர்ணன் வீட்டுக் கதவைத் தட்டியது மாதிரி ! - - மீரா ✤ ✤ ✤ ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது "ஏன் இந்தப் பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது ?" என்று ! - - தபு ஷங்கர் ✤ ✤ ✤ மல்லிகை பூ தான் விற்கிறார்கள் தெருவில் . ஆனால் எனக்கோ அவள் வாசமே வீசுகிறது .. - வித்யாசாகர் ✤ ✤ ✤ எப்படிப் பாதுகாக்க? குடைக் கம்பியில் உன் கைரேகை. - ...