Posts

Showing posts from September, 2018

மணமகள் சத்தியம்

திருமணத்தில் மணமகள் தன் வாழ்க்கை துணை நோக்கி அவளின் கனவுகளை, அன்பை, சொல்லிடும் அழகிய கவிதை.. காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம் சத்தியம் இது சத்தியமே. தாய் வழி வந்த பெண்கள் தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே. ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது.. வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன். கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன். உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன் மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன் மலை காற்றாய் தலை கோதி நித்திரை தருவேன். காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம் சத்தியம் இது சத்தியமே. உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன். உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன். காலம் மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன். கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன். அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன். உன் ஆண்மை நிறையும் போதும் உந்தன் தாய் போல் இருப்பேன் உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன். உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன். காதல் கணவா, உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம...

மணமகன் சத்தியம்

திருமணத்தில் மணமகன் தன் வாழ்க்கை துணை நோக்கி அவனின் கனவுகளை, அன்பை,  சொல்லிடும் பாடலின் அழகிய கவிதை.. கண்ணே கனியே உனை கை விட மாட்டேன்.. சத்தியம் சத்தியம் இது சத்தியமே. மாலை சூடிய காலை கதிரின் மேலே.. சத்தியம் சத்தியம் இது சத்தியமே. ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது.. இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன். பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் செல்ல கொலுசு சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்.. கை பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன். ஒவ்வொரு வாதமும் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்.. கண்ணே கனியே  உனை கை விட மாட்டேன்.. அர்த்த ஜாம திருடன் போலே அதிர்ந்து பேசேன் காமம் தீரும் பொழுதிழும் என் காதல், தீரேன் மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன் நோய் மடியொடு நீ விழுந்தால் தாய் மடி ஆவேன்.. சுவாசம் போல அருகில் இருந்து சுக பட வைப்பேன். உந்தன்  உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்.. உன் க...