கவிதை - கமல் ஹாசன்
கமல் ஹாசன் அவர்களின் " மனித வணக்கம் " கவிதை வரிகள் ரசிக்க .. தாயே , என் தாயே ! நான் உரித்த தோலே அறுத்த கொடியே என் மனையாளின் மானசீக சக்களத்தி , சரண் . தகப்பா , ஓ தகப்பா ! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று . புரியாத வரியிருப்பின் கேள் ! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன் . தமையா , ஓ தமையா ! என் தகப்பனின் சாயல் நீ . அச்சகம் தான் ஒன்று இங்கே அர்த்தங்கள் வெல்வேறு . தமக்காய் , ஓ தமக்காய் ! தோழி , தொலைந்தே போனாயே ? துணை தேடி போனாயே ? மனைவி , ஓ காதலி ! நீ தாண்டா படியெல்லாம் நான் தாண்ட குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை . மகனே , ஓ மகனே ! என் விந்திட்ட விதையே செடியே , மரமே , காடே மறு பிறப்பே மரண சௌகர்யமே , வாழ் ! மகளே , ஓ மகளே ! நீயும் என் காதலியே எனதம்மை போல எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா ? இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா ? நண்பா , ஓ நண்பா ! நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் ...