கவிதை - கமல் ஹாசன்
கமல்
ஹாசன் அவர்களின் "மனித வணக்கம்" கவிதை
வரிகள் ரசிக்க..
தாயே,
என் தாயே
!
நான்
உரித்த தோலே
அறுத்த
கொடியே
என்
மனையாளின் மானசீக சக்களத்தி, சரண்.
தகப்பா,
ஓ தகப்பா
!
நீ
என்றோ உதறிய மை
படர்ந்தது
கவிதைகளாய் இன்று.
புரியாத
வரியிருப்பின் கேள் !
பொழிப்புரை
நான் சொல்லுகின்றேன்.
தமையா,
ஓ தமையா !
என்
தகப்பனின் சாயல் நீ.
அச்சகம்
தான் ஒன்று இங்கே
அர்த்தங்கள்
வெல்வேறு.
தமக்காய்,
ஓ தமக்காய் !
தோழி,
தொலைந்தே போனாயே?
துணை
தேடி போனாயே?
மனைவி,
ஓ காதலி !
நீ
தாண்டா படியெல்லாம்
நான்
தாண்ட குமைந்திடுவாய்
சாத்திரத்தின்
சூட்சுமங்கள் புரியும் வரை.
மகனே,
ஓ மகனே !
என்
விந்திட்ட விதையே
செடியே,
மரமே, காடே
மறு
பிறப்பே
மரண
சௌகர்யமே, வாழ் !
மகளே,
ஓ மகளே !
நீயும்
என் காதலியே
எனதம்மை
போல
எனைப்
பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா?
நண்பா,
ஓ நண்பா !
நீ
செய்த நட்பெல்லாம்
நான்
செய்த அன்பின் பலன்
இவ்விடமும்
அவ்விதமே.
பகைவா,
ஓ பகைவா !
உன்
ஆடையெனும் அகந்தையுடன்
என்
அம்மணத்தை கேலி செய்வாய்.
நீ
உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன்
அம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும்,
குலமென்றும்
நீ
வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி
விடும்
நிர்வாணமே
தங்கும்.
வாசகா,
ஓ வாசகா !
என்
சமகால சகவாசி, வாசி.
புரிந்தால்
புன்னகை செய்.
புதிரென்றால்
புருவம் உயர்த்து.
பிதற்றல்
என தோன்றின்,
பிழையும் திருத்து.
எனது
கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நானும் தெரிவேன்.
Comments
Post a Comment