இசை - குறுந்தொகை - சகா
சில தினங்களுக்கு முன் ஒரு பாடல் இணையத்தில பார்க்க/கேட்க நேர்ந்தது.
முதல் முறை கேக்கும்போதே இசையும் பாடல் வரிகளும் ரொம்ப இனிமையாக இருந்தது.
குறுந்தொகையில இருந்து வரிகளை எடுத்து பாடல் சரணமா அமைச்சு இருக்காங்க.
அதுதான் ரொம்ப அழகா இருக்கு.பின்னணி இசை பிரமாதம்..
கேட்டு பாருங்க.
https://www.youtube.com/watch?v=3wnG9k3VbVE
படம் : சகா
இசை : சபிர்
குறுந்தொகை பாடல் வரிகள் [சரணம்]
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, கலந்தனவே.
பாடல் வரிகள் அர்த்தம்:
என் தாயும், உன் தாயும் என்ன உறவு ஆகியரோ.
என் தந்தையும், உன் தந்தையும் எந்த முறை சொந்தம்?
செம்மண் (மழை) நீரோடு இரண்டற கலந்தது போல
அன்புடைய நெஞ்சம் ஒன்றாக கலந்தனவே..
Comments
Post a Comment